ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 356

கேள்வி: அன்பர்கள் அனைவரும் மனிதர்களை பார்க்காமல் செயலை மட்டும் பார்க்கும்படி அருள வேண்டும்:

ஓரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது இரசவாதத்தைவிட கடினமானதப்பா. செம்பை தங்கமாக்குவது இரும்பை தங்கமாக்குவது என்பதை இரசவாதம் என்கிறார்கள். ஆனால் மனிதனை மனிதனாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள். இயல்பாக ஒரு மனிதனிடம் பக்குவம் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் வார்த்தைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஒருவன் கோபப்பட்டாலோ மனம் தளர்ந்து போனாலோ அவனால் ஆன்மீகத்தில் எப்படி மேலேறி வரமுடியும்? என்பதை அவனவனேதான் சிந்தித்து உணர வேண்டும். அப்படி வருவதற்கு வேண்டிய பிரார்த்தனைகளை அனைவரும் செய்ய நன்மை உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.