ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 55

கேள்வி: சாப்பாட்டிற்கு அரை மணி முன்பும் பின்பும் நீர் அருந்தக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா? ஒரு நாளுக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? எப்போது அருந்த வேண்டும?

இதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுமப்பா. இறைவனருளால் கூறுவது என்னவென்றால் தூய நீர் கட்டாயம் மனிதன் பருக வேண்டும். உடல் உழைப்பு செய்து அதிகமாக வியர்வை வெளியே வந்தால் அதிகமாக நீரை பருக வேண்டும். அதே சமயம் நீரின் அளவை அவன் நாவே அறிவிக்கும். நா வறண்டு போகும் பொழுதெல்லாம் அவன் தேவையான நீரை பருக வேண்டும். உணவு உண்ணும் பொழுது இடையிடையே நீர் பருகுவது கட்டாயம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் செயலாகும். இது செரிமான மண்டலத்தை கட்டாயம் பாதிக்கும். அதே போல் உணவிற்கு முன் அதிகமான நீர் பருகுவதும் தவறு. வேண்டுமானால் ஒரு நாழிகைக்கு (24 நிமிடங்கள்) முன்பாக நீரை பருகி பிறகு உணவு உண்ணலாம். உண்கின்ற உணவை வாயிலிட்டு நன்றாக பற்களால் மென்று கூழாக்கி அனுப்பிவிட்டால் இடையிடையே நீர் பருக வேண்டிய நிலை வராது. அடுத்ததாக உண்ணும் பொழுது ஏதேதோ வாழ்வியல் சிந்தனைகளை வேதனைகளை சிந்தித்துக் கொண்டு உண்ணுவதும் அந்த உணவு சரியாக உடலில் கலப்பதற்குரிய சூழலை ஏற்படுத்தாது. உணவை உண்டு முடித்த பிறகு சிறிது அவகாசம் இட்டு நீர் பருகுவது சிறப்பு. இல்லையென்றால் செரிமானத்திற்கென்று சுரக்கின்ற அமிலங்கள் பாதிக்கப்படும். ஆனால் இதை பின்பற்றுகிறேன் என்று நெஞ்சடக்கி யாரும் அவதிப்படவேண்டாம்.

கேள்வி: அகத்தியான் பள்ளியில்தான் தங்களுக்கு இறைவன் திருமண காட்சி (சிவபெருமான் – பார்வதிதேவி) கிடைத்ததா?

எல்லா இடங்களிலும் இறைவன் அந்த காட்சியை கொடுத்தார். அந்த இடத்திலும் பரிபரணமாக தந்தருளினார்.

அகத்தியான்பள்ளி கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.