ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 528

கேள்வி: தீபத்தை புதிதாக தான் ஏற்ற வேண்டும். பழைய விளக்கில் எண்ணையை ஊற்றி தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது அது பற்றி விளக்குங்கள்:

இறைவன் அருளால் பரிகாரம் கோரிக்கை பாவங்கள் குறைய வேண்டும் என்று ஒரு நேர்த்திக்கடனாக செய்யப்படும் பூஜைகளிலே புதிய விளக்குகளை ஏற்றுவதும் புதியதாக அனைத்தையும் பயன்படுத்துவதும் சிறப்பு. ஆனால் சாதாரணமாக ஒரு ஆலயத்துக்கு செல்கிறான் ஒரு மனிதன். அங்கு ஒரு தீபம் அணையும் நிலையில் இருக்கிறது. அதனை தூண்டிவிட்டு சுடர்விட செய்யலாம். அதில் ஒன்றும் தோஷம் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் தொண்டாக செய்யும் பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றுவது தவறில்லை. ஆனால் பிராயச்சித்தம் என்று வரும்பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றக்கூடாது. சாப்பிட்ட இலையில் சாப்பிடுவாய் என்றால் ஏற்றிய தீபத்தில் ஏற்றலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.