ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 509

கேள்வி: முளைப்பாரிகை பூஜையின் தாத்பரியம் என்ன?

இறைவனின் கருணையைக் கொண்டு எத்தனையோ மரபுகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. எத்தனையோ பூஜைகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. இதுபோல் பாவனா பக்தி மார்க்கத்தில் எத்ததனையோ விஷயங்கள் இருக்கின்றன. தத்துவார்த்த பக்திக்கும் பாவனா பக்திக்கும் வெகுதூரம். சித்த நிலைக்கும் பக்த நிலைக்கும் வெகுதூரம். இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு பக்தனை அல்லது பக்தி வழியை ஏன் ஆதரிக்கிறோம் என்றால் ஏதாவது ஒரு வழிமுறையை பிடித்துக் கொண்டு அவன் இறையை நோக்கி செல்ல வேண்டும் என்றுதான். குழந்தை நடக்க வேண்டும் என்பதே தாய்க்கும் தந்தைக்கும் விருப்பம். அதற்குத்தான் நடைபழக ஒரு வண்டி நடை வண்டி ஆனால் கடை (இறுதி காலம்) வரையிலும் ஒரு குழந்தை நடை வண்டியை பிடித்துக் கொண்டு நடந்தால் தாய் தந்தை அதை ஆதரிக்க மாட்டார்கள். எனவே பக்தியில் இருக்கக்கூடிய அத்தனை மரபுகளும் ஏற்புடையதே. ஒரு குழந்தையின் நடைவண்டி போல ஒரு நிலை தாண்டத் தாண்ட அந்த மரபுகளெல்லாம் அடுத்த குழந்தைக்கு பொருந்தும் என்று கூறிவிட்டு இந்த குழந்தை வளர வேண்டும்.

சிறுகுழந்தையாக இருக்கும் பொழுது அட்சரம் அட்சரமாக கூட்டி வாசிக்கும் பொழுது ஆஹா என் குழந்தை நன்றாக கல்வி கற்கிறான் என்று அனைவரும் பெருமிதம் கொள்வார்கள். 20 வருடம் கடந்த பிறகு எங்கே நீ என்ன கற்றிருக்கிறாய் கூறு எனும் பொழுது முன்பு போலவே அட்சரம் அட்சரமாக எழுத்தை கூட்டி வாசித்தால் யாரும் பாராட்ட மாட்டார்கள். எனவே பக்தி வழியில் சம்பிரதாயங்கள் அனைத்தும் ஏற்புடையதே உயர்ந்ததே. ஆனாலும் அதே இறைவனிடம் கரைவரையும் அழைத்துச் செல்லாது.

அதுபோலவே புத்தி வளர வளர எப்படி உலகியல் முறைகள் எல்லாம் மாறிக் கொண்டு வருகிறதோ பக்தியில் மேலே ஏற ஏற பல்வேறு மரபுகளை தாண்டி ஒரு மனிதன் அமைதியாக அமர்ந்து உள்ளத்திற்குள் இறைவனை தேடுகின்ற நிலைக்கு வந்துவிட வேண்டும். இருந்த போதிலும் இதுபோல் சேயவள் கேட்டிட்ட வழிபாடெல்லாம் ஒரு வளர்ச்சியை நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது கூட திருமண சடங்குகளில் இது பயன்பட்டு வருகிறது. இது போல் அடுத்தடுத்து வாழையடி வாழையாக ஒரு வளர்ச்சி வேண்டும் என்று மனதிலேயே வளர்த்துக் கொண்டு முற்காலத்தில் இதுபோன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினார்கள். இன்னும் இதைத் தாண்டி இன்னும் பல்வேறு விதமான மங்கலம் என்கிற பொருள் பட பல்வேறு பழக்க வழக்கங்கள் ஆலயங்களில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்தும் சுபத்தை சுட்டிக் காட்டுவதாகா இனியாவது வாழ்க்கை சுபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பாவங்கள் ஒரு மனிதனை எந்த அளவிற்கு வாட்டினாலும் இனி இது போல் வழிபாட்டிற்கு பிறகு அந்த குறிப்பிட்ட பாவம் அவனை விட்டு விலக வேண்டும் என்பதற்காகவும் எல்லாவற்றையும் தாண்டி கடும் களத்திர தோஷம் நீங்க வேண்டியும் வழிபாட்டு முறை முற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தாண்டி இன்னவளுக்கு போதிக்கப்பட்ட விஷயமும் இதில் அடங்கும். பத்திரம் என்ற சொல்லுக்கு எத்தனை பொருள் இருக்கிறது? கவனம் என்று சொல்லும் வருகிறது. அதி முக்கியம் என்ற சொல்லும் வருகிறது. ஆஸ்தி குறித்து ஒரு சாசனம் எழுதி வைத்தால் அதற்கும் இந்த பெயர் வருகிறது. இதே போல் இறைவனுக்கு சாற்றுகின்ற வில்வத்திற்கு பின்னால் இந்த சொல் பொருந்தி வருகிறது. இன்று சாளக்கிராம மூர்த்தி திருவடியை வணங்கினீர்களே? அதுபோல் ராமருக்கு பிரியமான பக்தன் ராமதாசன் என்ன செய்தான்? அந்த பத்ராசனத்திலே ராமருக்கு அற்புதமான ஆலயம் ஒன்றை எழுப்பியிருக்கிறான் கோதாவரி நதிக்கரையிலே. இவற்றை சரியாக சொல் ஆய்ந்து பார்த்தால் மிக அதி முக்கியம் என்று சொல்லானது வருகிறது. ஆனால் தெய்வ சந்தித்தியம் என்று வரும்பொழுது அதி அதி அதி அதி கூர்மையான அதி அதி தேவையான என்ற பொருள் வருகிறது வேற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அது தெய்வத்தை சார்ந்த, தெய்வத்தை தொழ, தெய்வ அருளை பெற உதவியாக தேவையாக இருக்கக் கூடிய ஒரு சூழலை தருவதால் இன்னவள் கூறிய இந்த விஷயம் அந்த பொருள்படும்படி அதற்கு சூட்டப்படுகின்றது. இருந்தாலும் இந்த தத்துவார்த்த விளக்கத்தை சார்ந்து இதுபோல் கூறும் பொழுது இது போன்ற நல்ல விதமான விஷயங்கள் எல்லாம் பொதுவாக எதற்காக தெய்வத்தோடு இணைக்கப்பட்டது? என்றால் ஒரு மனிதன் சராசரி நிலையிலிருந்து எடுத்த எடுப்பிலேயே தத்துவார்த்தமாக தெய்வத்தை புரிந்து கொள்ள முடியாது என்பதற்காகத்தான் தல விருட்சமோ நதி தொடர்பான விசயமோ மற்ற விஷயங்களோ ஏற்படுத்தப்பட்டது. இவைகளை எல்லாம் தாண்டி பக்தியில் எத்தனையோ விஷயங்கள் வழக்கொழிந்து இருக்கின்றன. அவையெல்லாம் கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல மேலே மேலே வரும்.

அதுபோல் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் சில ஜாதக நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். பல ஜாதக நிலைக்கு அமையாமல் விதி தடுத்து விடும். இறைவனின் கருணையை கொண்டு இருக்கின்ற பரம்பொருள் ஒன்று வடிவங்கள் வேறு. இந்த வடிவங்களில் ஆண் தன்மை பெண் தன்மை என்று இரு பகுதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுதுமே ஒரே ஒரு சக்தி அது எந்த ஆற்றலாக இருந்தாலும் அந்த ஆற்றலில் கட்டாயம் இரு துருவங்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. அது போல் ஒரே சக்தியின் இரு நேர் வடிவங்கள் தான் ஆண் சக்தி பெண் சக்தி. ஆண் பெண்ணை தாண்டியது தான் பரம்பொருள் தான் என்பது உண்மையான தத்துவார்த்த விளக்கம். இதனையும் தாண்டி சிறு சிறு வடிவங்கள் கூட பரம்பொருளுக்கு சுட்டப்பட்டு விட்டது. இன்னொன்று இருக்கிறது. நன்றாக வாழ்ந்து பாவங்களையே சேர்க்காமல் பாவங்களை எல்லாம் அனுபவித்து பரிகாரம் செய்து பல புண்ணியக்காரன் காரியங்கள் செய்து முழுக்க முழுக்க புண்ணிய ஆத்மாவாக ஒரு பிறவியை அல்லது எத்தனையோ பிறவிகள் எடுத்து முடித்துக் கொண்ட ஆத்மாக்கள் எல்லாம் பதிவு உயர்வு என்று மனிதனால் கொடுக்கப்படுவது போல இறைவனால் சிறு சிறு தேவதை வர்க்கங்களாகவும் அல்லது காவல் தெய்வங்கள் ஆகவும் பதவி உயர்வு தரப்படுகிறது. அப்படியெல்லாம் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றி இருக்கின்றன.

இவைகள் ஒரு புறம். அதே சமயம் பைரவர் மூர்த்தங்களை 64 என்று மனிதர்கள் கருதுகிறார்கள். அல்ல 108 பைரவ மூர்த்தங்கள் அதற்கு மேலும் உண்டு. இதில் மனித லோகத்திற்கு என்று சில பைரவ வழிபாடுகள் கூறப்பட்டிருக்கின்றன. பாதாள லோக பைரவ வழிபாடு என்று இருக்கிறது. அதே சமயம் பல்வேறு மலினங்களையும் தவறுகளையும் செய்தாலும் மனித பக்தியில் மட்டும் எங்காவது எள்ளளவு கடுகளவு பக்தி இருந்தாலும் இறைவன் ஏற்றுக் கொண்டு விடுகிறார். ஆனால் பாதாள லோகம் மேலுலகம் தேவருலகம் யட்சர் உலகம் அசுர உலகத்தில் எல்லாம் கடுகளவு பிழை என்றாலும் இறைவன் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் தான் எப்பொழுதுமே இறைவனுக்கு மனிதர்கள் செல்லப் பிள்ளைகள் என்கிற கோபம் அனைத்து மேல் உலக வர்க்கத்தினர் இடமும் இருக்கிறது. அதனால் தான் சிறு சிறு தேவர்கள் கூட பல்வேறு தருணங்களில் எத்தனை தவறுகள் செய்யும் மனிதர்களுக்கு ஏன் இறைவன் இத்தனை சலுகைகள் காட்டுகிறார் என்றெல்லாம் கூட இறைவனை பார்க்கும் பொழுது எதிர்வாதம் செய்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்கட்டும். அதைப்போல விநாயக மூர்த்தங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதையும் 108 என்று வகை வகையாக பிரிக்கலாம். இதை அறிவு பூர்வமாக எப்படி புரிந்து கொள்வது? ஒரு மனிதன் இருக்கிறான் ஒரு அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி அவனுக்கு தரப்படுகிறது. இன்ன பதவி என்று நாமும் இடப்பட்டு அவனுக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. பிறகு வேறு சில காரணங்களுக்காக அதைத் தாண்டி அந்த பணி இருக்க வேறொரு வேலை கொடுக்கப்படுகிறது. அப்பொழுது அதே மனிதன் வேறு சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது. அப்பொழுது அவனுக்கு வேறு நாமம் கொடுக்கப்படுகிறது. பிறகு இன்னும் சில காலங்கள் கழித்து வேறொரு பணி கொடுக்கப்படுகிறது. இப்பொழுது அவன் முதலில் செய்த பணி தொடர்பாக ஒருவன் வந்தால் நீ கூறுவது உண்மைதானப்பா. அந்த பணியும் எனக்குத்தான் ஆனால் அதைத் தாண்டி இப்பொழுது வேறு சில பணிகள் வந்து விட்டதால் அதை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே எனக்கு பதிலாக அந்த இடத்தில் வேறு ஒருவனை நிறுவனம் அமர்த்தி இருக்கிறது. அவனை சென்று பார் என்று கூறுவானே அதைப்போல அதே பரம்பொருள் ஒரு மனிதனை என்ன வேண்டும்? எதற்கு இறைவனை நாட வேண்டும்? என்ன விஷயமாக நாட வேண்டும்? என்றெல்லாம் தோன்றும் பொழுது சராசரி பக்தி நிலையிலேயே கல்வி வேண்டுமென்றால் அந்த பரம்பொருளை நீ கலைவாணியாக பாரப்பா கல்வியோடு ஞானம் வேண்டும் என்றால் ஹயக்ரீவராக பாரப்பா இல்லை எனக்கு பொருள் வேண்டுமென்றால் அந்த பரம்பொருளை லட்சுமியாக பாரப்பா என்று புரிவதற்காக குறிக்கப்பட்டது. அதிலும் உப விஷயங்களாக சில வழிபாடுகள் கால ஓட்டத்தில் மகான்களாலும் மனிதர்களாலும் வகுக்கப்பட்டது.

இப்படி பிரித்து பிரித்து பரம்பொருளை வணங்கினாலும் அல்லது ஏதாவது ஒரு வடிவத்திற்குள் வணங்கினாலும் அல்லது வடிவமே இல்லாத பேராற்றல் ஆக எண்ணி வணங்கினாலும் வழிபாடு என்பது முக்கியம். மனதிலேயே சுத்தத் தன்மை எந்தவிதமான எதிர்பார்ப்பு இல்லாத பக்தி முக்கியம். அந்த வகையில் நீ கூறியதை தாண்டியும் அன்னை கலைவாணிக்கு வடிவங்கள் உண்டு. வடிவம் எடுக்க வேண்டும் என்று பரம்பொருள் எண்ணிவிட்ட பிறகு அது எப்படி எண்ணிக்கைக்குள் அடங்கும் 64 தான் என்று ஒரு மனிதன் கூறினால் ஏன் 108 ஆக தாயே நீ வடிவம் எடுக்க கூடாதா? என்று ஒரு பக்தன் கேட்பான். இன்னொரு பக்தன் 1008 ஆக எடுக்கக் கூடாதா? என்று கேட்பான். எனவே அது இத்தனை என்ற எண்ணிக்கைக்குள் அடங்காத வடிவம் எனவே எப்படி நீ வழிபட்டாலும் அது வழிபடும் மனிதனின் கர்ம வினையை பொருத்தி பரம்பொருளின் அனுகிரகம் இருக்கும். அதே தருணம் 64 தான் என்று முடிவெடுத்து அதற்குள் வழிபாட்டினை சுருக்கிக் கொண்டாலும் தவறு ஒன்றும் இல்லை. இருந்தாலும் ஒட்டுமொத்த ஞானமும் கல்வியும் பரம்பொருளிடம் இருந்து ஒரு வித்தையை கற்க வேண்டிய முறைகளை ஒரு மனிதன் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள அறிவுப்பூர்வமாக கேட்பவர்களுக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். இறைவன் நேரடியாக ஒரு மனிதனுக்குள் புகுந்து கொண்டோ அல்லது தன் ஆற்றலை பாய்ச்சியோ எவ்வாறு இதை செய்ய முடியும்? என்று கேட்பவர்களுக்கு அந்தந்த தெய்வங்களுக்கு உரிய நாம வழியை அல்லது தெரிந்த மந்திரத்தை உள்ளன்போடு உருவேற்ற உருவேற்ற எதை எண்ணி மனிதன் உருகுகின்றானோ சிந்தனையில் அந்த பகுதி ஜொலிக்க துவங்கும். அது அவனுக்குள் இன்னும் மெருகேற துவங்கும். இன்னுமொரு வகையில் கூறப்போனால் அது அவனுக்குள்ளேயே இருக்கிறது. அது எங்கே? என்பதை அவனுக்கு இறைவன் சுட்டிக்காட்டுகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.