ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 593

கேள்வி: லலிதா சகஸ்ரநாமத்தை பற்றி:

இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால் லலிதா சகஸ்ரநாமத்தை ஒன்று மூன்று ஐந்து மண்டலம் (ஒரு மண்டலம் என்பது 48 நாள்) பிரார்த்தனையாகவோ யாகமாகவோ ஆலயத்திலோ இல்லத்திலோ அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றுமப்பா. இது பக்தி வழி. யோக மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால் குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பை கற்றுக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து நித்தமும் உச்சரித்து வந்தால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது எழுவதை உணரலாம். எனவே எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும் அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்புமப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.