ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 46

கேள்வி: ராம நாமத்தை பற்றி

சதா உள்ள சுத்தியோடு ராம நாமத்தை ஜபித்து வந்தால் மனிதனை இறைவனிடம் சேராமல் தடுப்பதற்கு இந்த உலகிலே எத்தனையோ சோதனைகள் துன்பங்கள் காத்திருக்கின்றன. ஒன்று மண் ஒன்று பொன் அடுத்தது பெண். இதை மட்டும் காமம் என்று மால் தூதன் (ஆஞ்சிநேயர்) உரைக்கவில்லை. காமம் என்றால் இச்சை ஆசை. எதன் மீதாவது ஒரு மனிதனுக்கு தீவிர ஆசையும் பற்றும் வந்துவிட்டால் அது கிடைக்கும் வரை அவனுக்கு வேறு எதிலும் கவனம் செல்லாது. ஒரு வேளை அது பலருக்கும் பயனுள்ள காரியமாக இருந்தாலும் பாதகமில்லை. ஒன்றுமில்லாத சுய நல லாப நோக்கம் வந்து விட்டால் அதற்காக எல்லா செயலும் ஏன்? தகாத செயலை செய்யக்கூட அவனை அந்த இச்சை அந்த ஆசை காமம் இழுத்து செல்லும். எனவே அப்பேற்பட்ட தனக்கும் தன்னை சேர்ந்தவர்களுக்கும் துன்பத்தை தரக் கூடிய அந்த காமத்தை ராம நாம ஜெபம் ஓட்டும் என்பதே பொருள்.

கேள்வி: காமத்தை வெல்வது எப்படி?

அபிராமி அந்தாதி ஓதி வரலாம். நல்ல பலன் உண்டு. சமீப காலத்தில் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு ஆண்களுக்கு காமம் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது. காமத்தை வெல்ல முடியாமல் பெரிய ஞானிகள் கூட தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனால் அபிராமி பட்டர் அதிலே சுலபமாக வென்றுவிட்டார். எப்படி என்றால் பார்க்கின்ற பெண்களையெல்லாம் அன்னையாகவே பார்த்தான். காமம் அவனை விட்டு ஓடி போய்விட்டது. அபிராமி பட்டறை புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். அந்த கோவிலிலே அன்னைக்கு பணிவிடை செய்த எத்தனையோ அர்ச்சகர்களில் ஒருவர் மட்டும் இவரை நன்றாக புரிந்து கொண்டார். அந்த தருணத்திலே ஞான நிலையில் இருந்து பட்டர் பாடிய பாடல்களை (அபிராமி அந்தாதி) அவர் பிரதி எடுத்து வைத்ததனால் தான் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

அபிராமி பட்டரின் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.