உணவு

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்ற ஒரு வரி இலக்கிய பாடல்களில் உள்ளது இதற்கான விளக்கம்

காக்கை – இதனை பிரித்து படித்தால் கால் + கை. உள்ளங்கையில் கால் அளவு என்று பொருள்.
கறி சமைத்து – காய்கறி சமைத்து
கருவாடு மென்று – இதனை பிரித்து படித்தால் கரு + வாடும் + என்று . கரு என்றால் உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று பொருள்.
உண்பர் சைவர் – சைவர்கள் உண்பார்கள்

பொருள்: உடலின் கருவாகிய உயிர் வாடும் முன்பாக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து சைவர்கள் உண்பார்கள்

கருத்து: சிவனை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சைவர்கள் சிவனை தரிசிக்கும் வரை உடலில் உயிர் தங்க வேண்டுமென்பதற்காக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பார்கள். இவ்வாறு உண்பதால் உடலில் நோய்கள் பெருகாது பற்றுகள் குறையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒல்லியான தேகத்துடன் இருப்பதினால் முக்திக்கு வழிகாட்டியான யோகப்பயிற்சிகள் தவங்கள் எளியாக செய்ய முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.