வினாச காலே விபரீத புத்தி

வினாச காலே விபரீத புத்தி இதன் பொருள் அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்பதாகும். இதற்கு உதாரணம்

அனுமான் இலங்கை நகரை தீக்கிரையாக்கி விட்டு சென்ற பின் ராவணனுக்கு கவலை அதிகரித்தது. தனது அமைச்சர்களை கூட்டி ஆலோசனை நடத்தினான். கும்ப கர்ணனும் விபீஷணனும் ராவணது செயலை கண்டித்தனர். கும்ப கர்ணன் பேசும்போது சீதையை அபகரித்து வருவதற்கு முன்பு செய்திருக்க வேண்டிய ஆலோசனையை இப்போது செய்வதில் என்ன லாபம்? என்றான்.

விபீஷணர் ராமர் நமது ராஜ்யத்தை அழிக்கும் முன்பு சீதையை ராமரிடம் திருப்பி அனுப்பி விடுவதே நலம் என்றார்.

சினம் கொண்ட ராவணன் குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்பே. நீ என் கண் முன் நில்லாதே இங்கிருந்து ஓடி விடு என்றான். விபீஷணனும் நான் உன் நலனை உத்தேசித்து பேசிய பேச்சு உனக்கு பிடிக்கவில்லை. வினாச காலே விபரீத புத்தி என்பது போல அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்று கூறி அவையை விட்டு வெளியேறி ராமரை சரண் அடைந்தான்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நாம் கவனமாக இருந்தாலும் விபரீத புத்தி வந்து நம்மைக் கெடுத்து விடும். ஆகவே

எண்ணத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள் ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள் ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.