நம: பார்வதி பதயே

சிவன் கோயில்களில் நம: பார்வதிபதயே என ஒருவர் சொல்ல ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வார்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் அவருக்கு மகாதேவன் என்று பெயர்.

பூலோகத்தில் உமாதேவியிடம் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் இறைவனை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தார். இவர் ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாக அழிந்து விட்டது. அதாவது உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும் உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும் என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார். அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே என்றார் திருஞானசம்பந்தர். அரன் என்றால் சிவன். சிவ நாமம் உலகம் முழுவதும் சூழ துயர்கள் அனைத்தும் தீரும்.

நம: பார்வதீபதயே என்று ஒரு பெரியவர் சொல்ல உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு அம்மையப்பனைத் துதித்து ஹர ஹர மகாதேவா என்று சொன்னால் அனைத்து தீயவைகளும் அழிந்து போகும்.

Image result for நம: பார்வதி பதயே"

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.