யார் சாத்தான்

மாணவன்- உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா?

ஆசிரியர்- ஆமாம்.

மாணவன்- அப்படியெனில் சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

ஆசிரியர்- உன்னிடம் சில கேள்விகள் கேட்கின்றேன் பதில் சொல். குளிர்நிலை என்று ஏதேனும் இருக்கிறதா?

மாணவன்- ஆமாம் இருக்கிறது.

ஆசிரியர்- குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். சரி தானே

மாணவன்- ஆமாம்

ஆசிரியர்- இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

மாணவன்- ஆம் இருக்கிறது.

ஆசிரியர்- மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் குளிரும் இருளும் எங்கும் உருவாகுவதில்லை. வெப்பம் இல்லாத இடத்தை குளிர் என்றும் ஒளி இல்லாத இடத்தை இருள் என்றும் அழைக்கின்றோம். அதே போல் சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் நம்பிக்கையின் பற்றாக்குறை. கடவுள் மீது எங்கு நம்பிக்கை இல்லையோ அன்பு இல்லையோ அந்த வெற்றிடமே சாத்தான் என்று அழைக்கப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.