பரா முதல் குழந்தை வரை

பரா முதல் குழந்தை வரை

ஆதியிலிருந்தே இருக்கின்ற பரா எனும் அசையா சக்தியிலிருந்து
பரை எனும் அசையும் சக்தி தோன்றி
அந்த பராபரையிலிருந்து சிவம் தோன்றி
சிவத்தில் சக்தி தோன்றி
சக்தியில் நாதம் (ஒலி) தோன்றி
நாதத்தில் விந்து (ஒளி) தோன்றி
விந்துவில் சதாசிவம் தோன்றி
சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி
மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி
ருத்திரனில் விஷ்ணு தோன்றி
விஷ்ணுவில் பிரம்மா தோன்றி
பிரம்மாவில் ஆகாயம் தோன்றி
ஆகாயத்தில் வாயு தோன்றி
வாயுவில் அக்னி தோன்றி
அக்னியில் நீர் தோன்றி
நீரில் நிலம் தோன்றி
நிலத்தில் அன்னம் தோன்றி
அன்னத்தில் உயிர்சக்தி தோன்றி
உயிர்சக்தியில் உதிரம் தோன்றி
உதிரத்தில் மாமிசம் தோன்றி
மாமிசத்தில் மேதை (அறிவு) தோன்றி
மேதையில் அஸ்தி (எலும்பு) தோன்றி
அஸ்தியில் மச்சை (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை) தோன்றி
மச்சையில் சுக்கிலம் தோன்றி
சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது.
சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து ஜலமயமாகிப் பின்
ஏழாம் தினத்தில் குமிழியாகி
முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி
அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு சிரசு உண்டாகி
தொண்ணூறாம் நாள் பிண்டம் திரண்டு மூட்டு கை கால்கள் உண்டாகி
நூற்று இருபதாம் நாள் தண்டமாய் நரம்பு நாடி உண்டாகி
நூற்றி ஐம்பதாம் நாள் ஒன்பது துவாரங்களும் உண்டாகி
இருநூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கருவை சூழ்ந்து புரளும்
இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி
தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி அறிவுக் கண் திறந்து
முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல் நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே பூமியில் பிறக்கும் குழந்தை.

One thought on “பரா முதல் குழந்தை வரை

  1. Dr.S.Palanisawmy Reply

    நல்ல ஒரு பதிவு.பல நல்ல சிந்தனைகளை தூண்டியது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.