கங்கைகாசியில் குளித்தால் பாவம் போகுமா

பரமசிவனும் பார்வதி தேவியும் ஒரு நாள் காசிக்கு மேல் வான வீதியில் போகும்போது காசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து குளிப்பதை பார்த்த பார்வதி தேவி பரமசிவனிடம் சுவாமி இங்கே பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தினமும் பாவம் போகும்னு நம்பி குளிக்கிறாங்க. அப்படியிருக்க இவர்களில் நிறைய பேர் இறந்த பிறகு நரகத்துக்கு வருகின்றார்கள். இவங்க பாவமெல்லாம் போகவில்லையே ஏன் அப்படி என்று கேட்டார்.

அதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த பரமசிவன் தேவி இங்கே வந்து போறவங்க நிறைய பேர் உண்மையில் கங்கையில் குளிப்பது இல்லே. அவர்கள் தங்கறின் உடலை தண்ணியில நனைக்கிறார்கள் அவ்ளோ தான் இதனை உனக்கு விளக்குகிறேன் என்று கூறி பார்வதியை அழைத்துக்கொண்டு காசி படித்துறை அருகே வந்தார் பரமசிவன். இருவரும் ஒரு முதிய தம்பதி போன்ற வேடத்துக்கு மாறினார்கள். கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில் உள்ள பாதை ஓரத்தில் உள்ள பெரிய சாக்கடை நீர் நிரம்பிய ஒரு குழியை காட்டிய பரமசிவன், தேவி நான் கீழே காணப்படும் அந்த படுகுழியில் விழுந்துவிடுகிறேன். நீ கூச்சல் போட்டு நான் சொல்வது போல சொல்லி எல்லோரையும் உதவிக்கு கூப்பிடு என்றார். பார்வதி தேவியும் அப்படியே காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என் கணவர் இந்த குழியில் விழுந்துவிட்டார் என்று அபயக்குரல் எழுப்பினார். வயதான மூதாட்டியின் கூக்குரலை கேட்டு அநேகர் ஓடி வந்தார்கள்.

என் கணவர் தள்ளாடியபடி நடந்து வரும்போது இந்த குழியில் விழுந்துவிட்டார். யாராவது இறங்கி சென்று அவரை காப்பாற்றுங்களேன் என்று அழுதபடி கேட்கிறார். என்ன இது இப்போ தானே கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தோம். போயும் போயும் இந்த சாக்கடை குழியில் இறங்குவதா என்று முகம் சுளித்தபடி பலர் சென்றுவிட்டனர். இன்னும் சிலர் இரக்கப்பட்டு வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றனர். ஓரிருவர் உதவ முன்வந்தனர். அவர்கள் குழியில் இறங்க முயற்சித்த போது பார்வதி அவர்களிடம் நில்லுங்கள் எனது கணவர் ஒரு யோகி பாபங்களே செய்யாதவர்கள் தான் என் கணவரை தொட்டு தூக்க வேண்டும். உங்களில் எவருக்கு உங்கள் ஜென்ம கணக்கில் பாவங்கள் இல்லையோ அவர்கள் மட்டுமே இறங்குங்கள் என்று கூறினார்.

அனைவரும் நாங்கள் நிறைய பாவங்கள் செய்திருக்கிறோம். எங்கள் கணக்கில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது எங்களை மன்னித்து கொள்ளுங்கள் தாயே என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இப்படியே பொழுது கழிந்துகொண்டிருக்க காசியில் நீராடிவிட்டு வந்த எவராலும் உதவ முடியவில்லை. கடைசீயில் ஒரு இளைஞன் வந்தான். அவன் பார்வதி கூறியதை கேட்டபிறகும் துணிவுடன் இறங்கினான். நில்லுப்பா நான் சொன்னதை கேட்டாய் அல்லவா உன் கணக்கில் பாவமே இல்லையா என்று கேட்டார். ஆம் தாயே. நேற்றுவரை என் கணக்கில் அனேக பாவங்கள் இருந்தன. ஆனால் நான் தற்போது தான் கங்கையில் புனித நீராடிவிட்டு வருகிறானே. கங்கையில் நீராடினால் பாபங்கள் தொலையும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படியிருக்க என் கணக்கில் பாவங்கள் இருக்காது என்றான். இறைவன் இறைவியை பார்த்து இப்போது புரிந்ததா தேவி கங்கையில் குளித்தவர்கள் ஏன் நரகத்திற்கு வருகின்றார்கள் என்று புன்முறுவல் செய்கிறார். இளைஞனின் பதிலால் மகிழ்ந்த இறைவனும் இறைவியும் அவனுக்கு தரிசனம் தந்து வாழ்த்திவிட்டு மறைந்தனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.