தலையில் குட்டிக் கொள்தல்

விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து காவிரிநதி பெருக்கெடுத்து ஓடுமாறு செய்தார். பின் காக்கை வடிவம் நீங்கி சிறுவனாய் மாறி அவரது முன்னே நின்றார். சிறுவனது தலையில் குட்டுவதற்காக அவனைத் துரத்திச் சென்றார் அகஸ்தியர். அகத்தியர் அருகில் வந்ததும் விநாயகர் தமது உண்மை வடிவில் காட்சியளித்தார். குட்டுவதற்கு ஓங்கிய கையால் தம் நெற்றியில் குட்டிக் கொண்டு வினாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் அகஸ்தியர். உங்களது முன்னர் நெற்றியில் குட்டிக் கொண்டு வழிபடும் மெய்யன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று அகஸ்தியர் வேண்டினார். விநாயகப் பெருமானும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அதன்படி கோயிலில் வினாயகர் முன்பு தனது தலையில் குட்டிக் கொண்டு வினாயகரின் அருளை பக்தர்கள் பெறுகிறார்கள்.

தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில் முன் தலையின் இரு புறங்களிலும் டெம்போரல் லோப் உள்ளது. இது தலையின் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. டெம்போரல் லோப் என்பது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள ஒரு ஜோடி பகுதி. காதுகளுக்கு அருகில் உங்கள் மண்டை ஓட்டின் உள்ளே இருக்கும் இந்த பகுதிகள் உணர்ச்சிகளை நிர்வகித்தல், புலன்களில் இருந்து தகவல்களை செயலாக்குதல், நினைவுகளை சேமித்து மீட்டெடுப்பது மற்றும் மொழியை புரிந்து கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த இடத்தில் தான் ஞாபக சக்தியைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் குட்டிக் கொள்வதால் இந்த நாடிகள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. இதனை மனதில் கொண்டு முன் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டணை கொடுத்தார்கள்.

இந்த வினாயகர் இருக்கும் இடம் குன்றக்குடி குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.