ருத்ராட்சம்

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பிரம்மனிடம் வரம் பெற்று சர்வ வல்லமை படைத்தவனாக இருந்தான். அந்த கர்வத்தினால் அனைத்து தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் எம்மிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டோம். அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரே சக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம் தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது மூன்று கண்களையும் அவர் பல ஆண்டுகள் மூடாமல் இருந்ததால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார்.

ருத்ராட்சத்தை பக்தியுடன் அணிபவர்களை சிவன் எப்பொழுதும் தன் கண் போலக் காப்பாற்றுவார். ருத்ராட்சம் அணிந்தால் மனமும் உடலும் தூய்மை அடைந்து நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும். ஆமாம் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும் உணவு உண்ணும் போதும் தூங்கும் போதும் இல்லறத்தில் ஈடுபடும் போதும் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர் சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் அணிபவர்கள் மது அருந்துதல் புகை பிடித்தல் புலால் உண்ணுதல் போன்றவற்றை விட்டுவிட வேண்டும். ருத்ராட்சம் நீரில் மூழ்கினால் அது நல்ல ருத்ராட்சமாகும் மிதந்தால் அது போலி.

ருத்ராட்சம் பெண்கள் அணியக்கூடாது என ஒரு கருத்து பரவலாக உள்ளது அது உண்மையா? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று அருணாசல புராணம் பாடல் எண் 330 விவரிக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.