புத்தர் இறக்கும் காலம் நெருங்கியதும் அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள். நீங்கள் அழுவதை பார்த்தால் நான் இதுவரை சொல்லிக் கொடுத்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் என்றார்.
தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள். அதை நினைத்து வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும் என்றார். அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தால் உங்களுக்குள் இருக்கும் ஒளியே உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது. அமைதியாக இருக்கும் அந்த சீடரைப் பாருங்கள். அவரால் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள் என்றார்.
அமைதியாக இருந்த சீடர் கூறினார் எனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ள புத்தர் உதவினார். நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும்? புத்தர் இங்கேதான் இருக்கப் போகிறார். இதுவரை புத்தர் ஒரு சிறு உடலுக்குள் அடங்கிக் கிடந்தார். ஒரு நதி கடலில் கரைந்து விடுவதைப் போல அவர் இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்து விடப் போகிறார். இந்தப் பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கப் போகிறார். எனக்கு இது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். இதனை எப்படி அறிந்து கொண்டாய் என்று அவரிடம் அனைவரும் கேட்டார்கள்.
என்னுடைய ஆன்மாவை நான் தெரிந்து வைத்திருப்பதால் புத்தர் இந்த உடலை விட்டு பிரபஞ்சத்தில் கலக்கப்போவது எனக்கு தெரிந்திருக்கிறது. அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன் . நீங்கள் அதனை உள்வாங்கவில்லை அதனால்தான் அழுகிறீர்கள் என்றார். புத்தர் மீண்டும் பேசினார். உனக்கு நீயே ஒளியாவாய் என்று புத்தர் கூறி விட்டு இந்த பிரபஞ்சத்தில் கலந்து விட்டார்.
