பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு என்று அறிவித்து அனைவரையும் தற்காப்பு பெல்ட் அணிய சொல்கிறார் விமானி. பயணிகள் மத்தியில் கலக்கம் பீதி. விமானம் குலுங்குகிறது. இறங்குகிறது மீண்டும் மேலே எழுகிறது. அப்பொழுது விமானியிடம் இருந்து ஒரு அறிவிப்பு ஒரு இயந்திரம் செயலிழந்து விட்டது இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பயணிகளின் கூக்குரல் விமானத்தை நிலைகுலையச் செய்தது. பிரார்த்தனை செய்து கொண்டும் தியானம் செய்து கொண்டும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி கொண்டும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள். ஒரு சிறுமி மட்டும் தன்னுடன் இருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த குழந்தைக்கு சிறிதும் பயமோ சலனமோ இல்லை.
சிறிது நேரத்தில் இயந்திரம் மீண்டும் இயங்குகிறது நாம் ஆபத்திலிருந்து தப்பி விட்டோம் என்று விமானி அறிவித்து அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்குகிறார் விமானி. அதில் பயணம் செய்த ஒரு விஞ்ஞானி இந்த காட்சியை கண்டார். தரை இறங்கிய உடன் அந்த விஞ்ஞானி அந்த குழந்தையை பார்த்து கேட்டார். இவ்வளவு அமர்க்களம் நடந்தது உனக்கு தெரியுமா உனக்கு ஏன் ஒரு துளி கூட பயம் வரவில்லை எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுமி இந்த விமானத்தை இயக்கும் விமானி என்னுடைய தந்தை. என் தந்தை என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை முழுவதும் எனக்கு உள்ளது. நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற சிறுமியின் பதிலால் திக்குமுக்காடி போனார் அந்த விஞ்ஞானி. அந்த குழந்தை தன் தந்தை மீது வைத்த முழு நம்பிக்கையை நாம் இறைனிடம் வைத்தால் பயம் என்ற ஒன்று வருமா?.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2022/08/shutterstock_615046436_19417.jpg?resize=472%2C472&ssl=1)