ஜீவன் முக்தி விதேக முக்தி

ரமண மகரிஷியிடம் பானர்ஜி எனும் பக்தர் ஒரு கேள்வி கேட்டார். ஜீவன் முக்திக்கும் விதேக முக்திக்கும் வித்தியாசம் என்ன?

ரமண மகரிஷிகள்: வித்தியாசம் ஒன்றுமில்லை. உடலுடன் இருக்கும் ஞானி ஜீவன் முக்தன். உடலை விடும்போது அவன் விதேக முக்தி அடைகிறான் என்று சொல்லலாம். ஆனால் இந்த வித்தியாசம் காண்பவருக்குத்தான் இருக்கும். ஞானிக்கு அல்ல. உடல் விடுவதற்கு முன்னும் பின்னும் ஞானியானவர் ஒரு நிலையிலேயே இருக்கிறான். நாம் ஞானியை மனித உருவமாக அல்லது அந்த உருவில் இருப்பவனாகப் பார்க்கிறோம். ஆனால் ஞானி தன்னை ஆன்மா ஒன்றேயான சத்வஸ்து. உள்ளும் புறமும் வியாபித்து எந்த உருவாலும் வடிவாலும் பந்தப்படாதவன் என்பதை அறிகிறான். பின்வரும் பாடலை பகவான் மேற்கோள் காட்டினார்.

தான்இருந்தும் தானாகத் தன்னைத்தான் நான்எவன்
யான்இருக்கும் ஸ்தானம் எதுவெனக்கேட் பானுக்கு
யான்எவன் எவ்விடம் யானுளன் என்றமது
பானனை யீடு பகர். – ஏகான்ம பஞ்சகம்

பொருள்: மது அருந்தியவனுக்குத் தன்மேல் ஆடை உள்ளதா இல்லையா என்ற உணர்வில்லாதது போல் ஞானிக்கு உடலின் உணர்வே இருக்காது. அது இருந்தாலும் விழுந்து விட்டாலும் வித்தியாசம் ஒன்றுமில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.