ஆசை

நண்பர்கள் இருவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது வெள்ளத்தில் ஓர் கம்பளி மூட்டை மிதந்து செல்வது கண்டனர் ஒருவன் ஆசையினால் அதை பிடித்து தனதாக்கிக் கொள்ள நினைத்து ஆற்றில் குதித்து கம்பளி மூட்டைப் பிடித்துக்கொண்டான். அப்போது ஆற்றின் வேகத்தில் கம்பளி மூட்டை அவனை அதனுடன் இழுக்க ஆரம்பித்தது. போராடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கரையில் இருந்த நண்பன்

கம்பளி மூட்டை போனால் போகிறது அதை விட்டு விட்டு நீ கரையேறு என்றான். அப்போது கம்பளி மூட்டையை பிடித்துக்கொண்டிருந்தவன் சொன்னான். இது கம்பளி மூட்டையல்ல கரடி நான் விட்டாலும் அது என்னை விட மறுக்கிறது என்றான். உயிர்கள் பொருள்களின் மீது ஆசை வைத்து அவற்றைப் பிடித்துக்கொண்டவுடன் அதன்பிடியில் சிக்கித் திண்டாடுகின்றார்கள். முடிவில் பிடித்த ஆசைகளை துறக்க நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை. ஆசையின் பிடியில் அவர்கள் கட்டுண்டு விடுகின்றனர். ஆசையும் பாசமும் அவர்களை துறப்பதாக இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.