ஸ்ரீ ஆதிசங்கரர் – ஒளியின் உதவி இல்லாமல் ஒரு பொருளை பார்க்க முடியாது. அதுபோலவே மனதில் ஆராய்ச்சி இல்லாமல் ஞானம் அடைய முடியாது. அஞ்ஞானத்தால் மனதில் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகும். கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
