சுலோகம் -29 # 30

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #29

என் உடல் அங்கங்கள் சோர்வடைகின்றன. என் நாக்கு உலர்கின்றது. என் உடலில் நடுக்கம் ஏற்படுகிறது. என் ரோமங்கள் சிலிர்க்கிறது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #30

எனது கையிலிருந்து காண்டீபம் நழுவி விழுகிறது. என் உடல் முழுவதும் தீப்பற்றியது போல் உள்ளது. என்னால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. எனது மனது அலைபாய்கிறது.

இந்த இரண்டு சுலோகத்திலிருந்தும் ஒரு கேள்வி: அர்ஜூனனின் உடலில் ஏன் இத்தனை மாற்றங்கள் ஏற்படுகிறது?

இந்தப் போர் நடந்தால் அதன் விளைவுகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். அனைத்து உறவினர்களும் நண்பர்களும் மரணத்தின் நுழைவு வாயிலில் நிற்பதைப் போல் அர்ஜூனன் எண்ணுகிறான். இந்த எண்ணம் அர்ஜூனனின் மனதில் பயத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தி அவனின் உடலில் இத்தனை மாற்றங்ளை உண்டாக்குகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.