சுலோகம் -27 # 28

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #27

கூடியிருந்த அனைத்து உறவினர்களையும் நன்கு பார்த்த குந்தியின் மகனான அர்ஜூனன் மிகுந்த இரக்கம் கொண்டவனாக துயரத்துடன் பேச ஆரம்பித்தான்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்தம் ஆரம்பிக்கும் நேரத்தில் அர்ஜூனனுக்கு இரக்கம் வர காரணம் என்ன?

யுத்தம் ஆரம்பித்தால் நான்கு பக்கமும் சூழ்ந்திருக்கின்ற உறவினர்கள் பலர் இந்த யுத்தத்தின் மூலமாக கொல்லப்படுவார்கள். உறவினர்கள் நண்பர்கள் மீது அர்ஜூனன் வைத்திருந்த பலவீனமான பற்று மற்றும் பாசம் காரணமாக அவனுக்கு அவர்கள் மீது இரக்கம் உண்டானது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #28

கிருஷ்ணா போர் புரிவதற்காக எனது உறவினர்கள் எனது முன்பாக ஒன்று கூடி நிற்பதைப் பார்க்கிறேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.