சுலோகம் -33 # 34

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #33

நாம் யாருக்காக ராஜ்யத்தையும் போகங்களையும் இன்பங்களையும் விரும்பினோமோ அவர்களே செல்வத்தையும் உயிர் மேல் உள்ள ஆசையையும் துறந்து யுத்தத்தில் நிற்கிறார்கள்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #34

குருமார்கள் பெரியப்பா சித்தப்பாக்கள் மகன்கள் அவ்விதமே பாட்டனார்கள் தாய்மாமன்கள் மாமனார்கள் பேரன்கள் மைத்துனர்கள் ஆகியோர் இங்கு கூடியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சுலோகத்திலும் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

ராஜ்யம் போகம் இன்பம் செல்வம் அனைத்திலும் நிலையான ஆனந்தம் கிடையாது என்று அர்ஜூனனுக்குத் தெரியும். இருந்தாலும் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்காகத்தான் அனைத்தையும் விரும்பி இருந்தான். ஆனால் அவர்களே போரில் தங்களின் உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தில் இறந்து விட்டால் அதன் பிறகு கிடைக்கும் ராஜ்யம் போகம் இன்பம் இதெல்லாம் யாருக்காக? ஆகவே யுத்தம் செய்வது சரியில்லை என்ற கருத்தில் அர்ஜூனன் அவ்வாறு கூறினான். சுலோகம் – 34 இல் சொல்லப்பட்ட உறவினர்கள் அனைவரும் யார் யார் என்று சுலோகம் – 26 இல் சொல்லப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.