சுலோகம் -24

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #24

சஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். பாரத நாட்டின் அரசே குடாகேசன் (அர்ஜூனன்) கூறியதை கேட்ட கிருஷ்ணர் உயர்ந்த தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் கொண்டு சென்றார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனனை சஞ்ஜயன் ஏன் குடாகேசன் என்ற பெயரில் கூறினார்?

குடகா என்றால் தூக்கம் குடாகேசன் என்றால் தூக்கத்தின் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டுபவன் என்று பொருள். அர்ஜூனன் தூக்கத்தை வென்றவன். அவன் எப்போதும் உடல் அசதிக்கு ஆட்படுவதில்லை எப்போதும் கவனத்துடனும் விழிப்புடனும் இருப்பவன். இந்த பெயரை சொல்லி அழைப்பதன் மூலமாக அர்ஜூனனை கௌரவர்கள் வெற்றி கொள்வது கடினம் என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்கிறார் சஞ்ஜயன்.

இந்த சுலோகத்தில் அர்ஜூனன் கிருஷ்ணர் இருக்கும் தேர் உயர்ந்த தேர் என்று சொல்லப்படுவதற்கான காரணம் சுலோகம் 14 இல் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.