சுலோகம் -5

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #5

திருஷ்டகேது சேகிதானன் வீரியமுடைய காசிராஜன் புருஜித் குந்திபோஜன் சிறந்த மனிதனாகிய சைப்யனும்

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டகேது என்பவன் யார்?

சிசுபாலனின் மகன். சேதி நாட்டு அரசன். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: சேகிதானன் என்பவன் யார்?

விருஷ்ணி வம்சத்தை சேர்ந்தவர். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். பாண்டவர்களின் ஏழு அக்ரோணிப் படைகளுக்குரிய ஏழு தளபதிகளில் இவரும் ஒருவர். இவர் மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: காசிராஜன் என்பவன் யார்?

காசி நாட்டு அரசன். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். மகாபாரதத்தில் சேனாபிந்து என்றும் க்ரோதஹந்தா என்றும் அபிபூ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: புருஜித் குந்திபோஜன் என்ற இருவரும் யார்?

இவர்கள் இருவரும் குந்தியின் சகோதரர்கள். பாண்டவர்களுக்கு தாய் மாமன் ஆவார்கள். இருவரும் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்கள்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: சைப்யனும் என்பவன் யார்?

இவரது பெண் தேவிகாவை யுதிஷ்டிரர் திருமணம் செய்திருக்கிறார். யுதிஷ்டிரனின் மாமனார் ஆவார். மனிதர்களில் சிறந்தவர். மிகப்பெரிய யுத்த வீரர் அதனால் இவர் நரபுங்கவர் என்று அழைக்கப்படுவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.