சுலோகம் -21 # 22

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #21

அச்சுதா எனது தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் சென்று நிறுத்துங்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனன் கிருஷ்ணரைப் பார்த்து ஏன் அச்சுதா என்று கூப்பிட்டார்?

எவர் தன் சுயரூபத்திலிருந்து தன் சக்தியாலும் பெருமையினாலும் வழுவாமல் நிலையாக இருக்கிறாரோ மேலும் எந்த இடத்திலும் எந்த நிகழ்விலும் எந்த நேரத்திலும் எவருக்கு தோல்வி என்பது இல்லையோ அவரே அச்சுதன் என்று அழைக்கப்படுகிறார். அச்சுதா என்ற பெயரை சொல்லி அழைக்கும் அர்ஜூனன் கிருஷ்ணருடைய தன்மையையும் பெருமையையும் அறிந்திருக்கிறேன் என்பதை இந்த வார்த்தையால் உணர்த்துகிறார்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #22

இந்த போர் தொடக்கத்தில் போர் புரிய விருப்பம் கொண்டு அணிவகுத்து நிற்கும் எதிரிப்படை வீரர்களை எவ்வளவு நேரம் நான் பார்க்கிறேனோ அவ்வளவு நேரம் ரதத்தை இரு படைகளுக்கும் நடுவே நிறுத்தி வையுங்கள். இந்தப் போரில் என்னுடன் யுத்தம் புரியப்போவது யார் என்று நான் பார்க்க வேண்டும்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனன் பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வந்திருப்பவர்களை பார்க்க ஏன் எண்ணினான்?

பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வந்திருப்பவர்கள் அனைவரும் தன்னுடைய உறவினர்களும் நண்பர்களும் என்பதை அர்ஜூனன் நன்கு அறிவான். யுத்தத்தில் தனக்கு துணையாக கிருஷ்ணரும் தன் கொடியில் அனுமனும் இருப்பதினால் பாண்டவ அணியினர் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று அர்ஜூனன் நம்பினான். பாண்டவர்களின் வெற்றியில் யுத்தம் முடியும் போது எதிரிப் படை வீரர்கள் பல பேர் உயிருடன் இருக்க மாட்டார்கள். ஆகவே தன்னுடைய உறவினர்களையும் நண்பர்ளையும் இறுதியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்களை பார்க்க அர்ஜூனன் எண்ணினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.