சுலோகம் -7

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #7

அந்தணர்களில் சிறந்தவரே நமது அணியிலும் பிரதான யுத்த வீரர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய படையின் தலைவர்களான அவர்களைப்பற்றி உங்களது கவனத்திற்காக சொல்கிறேன்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்தத்தில் இருக்கும் அனைவரையும் துரோணருக்கு தெரியும் இருந்தும் துரியோதனன் ஏன் அவர்களின் பெயரை துரோணரிடம் சொல்கிறான்?

துரோணரிடம் பாண்டவர்களின் பெயரை குறிப்பட்ட போது இதனைக் கேட்ட தமது படை வீரர்கள் எதிரணியில் இத்தனை பெரிய வீரர்கள் இருக்கின்றார்களே என்று திகைத்து விடக்கூடாது எதிரணி வீரர்களை விட பலசாலிகள் நமது அணியில் இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவும் யுத்தத்தில் ஈடுபடும் வீரர்களின் பெயரை அனைவருக்கும் முன்பாக துரியோதனன் பெருமைப்படுத்தி சொல்வதினால் அவர்கள் திருப்தி அடைந்து மேலும் உற்சாகத்தோடு யுத்தம் புரிவார்கள் என்ற காரணத்திற்காகவும் துரியோதனன் துரோணரிடம் அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொன்னான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.