முன்னுரை

சிவனின் 64 வடிவங்கள்

சிவவடிவங்கள் அறுபத்து நான்கு என்பவை இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமஸ்கிருத மொழியில் அழைப்பார்கள். இறைவனுக்கு 5 முகங்கள் உள்ளது. ஈசானம் தத்புருடம் அகோரம் வாமதேவம் சத்யோசாதம் என்ற இந்த ஐந்து முகங்களிலிருந்து முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை

ஈசானம் – 1. சோமாஸ்கந்தர் 2. நடராஜர் 3. ரிஷபாரூடர் 4. சந்திரசேகரர் 5. கல்யாணசுந்தரர்
தற்புருஷம் – 1. பிட்சாடனர் 2. காமசம்ஹாரர் 3. சலந்தராகரர் 4. கால சம்ஹாரர் 5. திரிபுராந்தகர்
அகோரம் – 1. கஜசம்ஹாரர் 2. வீரபத்திரர் 3. தட்சிணாமூர்த்தி 4. நீலகண்டர் 5. கிராதர்
வாமதேவம் – 1. கங்காளர் 2. கஜாரி 3. ஏகபாதர் 4. சக்ரதானர் 5.சண்டேசர்
சத்யோசாதம் – 1. இலிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. அர்த்தநாரீஸ்வரர் 4. அரியர்த்த மூர்த்தி 5. உமாமகேஸ்வரர்

இந்த இருபத்தியைந்து மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயக் கலைக் களஞ்சியம் கஜாரி, கஜமுக அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, ஹரிவிரிஞ்சதாரணர், ஏகதசருத்திரர், முயலகவத மூர்த்தி, சர்வ சம்ஹாரர், யக்ஞேசுவரர், உக்கிரர் என சிவனின் வடிவங்கள் பலவற்றை புராணங்கள் கூறுகிறது.

அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும் அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவபெருமான் அருளியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈக்காடு இரத்தினவேலு என்பவரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த 64 ரூபங்களைப் பற்றி பாம்பன் சுவாமிகள் அட்டாட்ட விக்கிரக லீலை எனும் பதிகம் செய்துள்ளார். இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும் 1. போக வடிவங்கள் 2. யோக வடிவங்கள் 3. கோப வடிவங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

போக வடிவம்:

  1. உமாமகேஸ்வரர்
  2. சந்திரசேகரர்
  3. ரிஷபாரூடர்
  4. மாதொருபாகர்

யோக வடிவம்:

  1. தட்சிணாமூர்த்தி
  2. ஞான தட்சிணாமூர்த்தி
  3. யோக தட்சிணாமூர்த்தி
  4. வீணா தட்சிணாமூர்த்தி
  5. சுகாசனர்

கோப வடிவம்:

  1. கங்காளர்
  2. வீரபத்திரர்
  3. திரிபுராந்தக மூர்த்தி
  4. கஜயுக்த மூர்த்தி
  5. காலந்தக மூர்த்தி

இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும் பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிவ வடிவங்களை உருவம் அருவம் அருவுருவம் என்று மூன்று வகைப்படுத்தலாம்.

உருவ நிலை: தலை உடல் கை கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் இருக்கின்ற சிலை மூர்த்திகளே உருவம் ஆகும்.

அருவ நிலை: உருவமே இல்லாத ஒளி ஒலி வடிவத்திலுள்ள சிவசக்தியின் நிலையே அருவம் ஆகும்.

அருவுருவ நிலை: தலை உடல் கை கால் என உறுப்புகள் எதுவும் இல்லாமல் சிவலிங்க வடிவத்தில் இருப்பதே அருவுருவ நிலை ஆகும்.

இவ்வுருவங்கள் உயிர்களின் பிறப்பினை ஒழிக்க சிவபெருமான் எடுத்தவையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.