சிவ வடிவம் – 16. சதா நிருத்த மூர்த்தி

சதா என்றால் எப்போதும் என்று பொருள். நிருத்தம் என்றால் நடனம் என்று பொருள். சிவபெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என ஐந்து தொழில்களையும் நடனம் ஆடியபடி சதாசர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இறைவனின் இந்த திருநடன உருவத்திற்கு நடராஜர் என்று பெயர். இந்த திருநடன உருவத்தினை உமையம்மை இடமிருந்து தரிசிக்கும் பொழுது சிவகனங்களும் தேவர்களும் நந்தி தேவரும் வாத்தியங்களில் இசையை ஒலித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த திருவுருவம் சதாநிருத்த மூர்த்தி ஆகும்.

சிவபெருமான் டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும் அமைந்த கரத்தினால் காத்தலும் மழு தாங்கிய கரத்தினால் அழித்தலும் முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால் மறைத்தலும் அனவரத நடனம் புரியும் அடிப் பாதத்தினால் அருளலும் புரிகின்றார்.

சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டேயுள்ளார். இங்கு இறைவனைக் கூத்தபிரான் என்றும் இறைவிக்கு சிவகாம சுந்தரி என்றும் பெயர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.