சிவ வடிவம் – 11. இடபாரூடமூர்த்தி

இடபம் என்றால் காளை. காளையுடன் இருக்கும் சிவனின் உருவத்திருமேனி இடபாரூடர் என்று வழங்கப்படுகிறது.

ஏறமர் கடவுள்
விடையேறிய விமலர்
விடையேறுவர்
விருஷப வாகனன்
பெற்றம் ஊர்ந்தவர்

என்று வேறு பெயர்களும் உள்ளது.

திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும் போருற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும் சிவபெருமானும் உமாதேவியும் தரும தேவதையாகிய வெண்ணிற ரிஷப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வந்தனர். இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக் கண்ட சிவபெருமான் ரிஷப வாகனத்தை விட்டு இறங்கி மேரு மலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற தலைகனம் ஏற்பட்டது.

இதனை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத ரிஷப வாகனமாகிய விஷ்ணு இரு செவி இரு கண்கள் மூக்கு போன்றவை பிதுங்கியும் இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். விஷ்ணுவின் தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க விஷ்ணுவும் சிவபெருமானின் வாம பாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு இடபாரூட மூர்த்தி என்ற பெயர் உண்டானது.

விராதனூர் – மதுரை
திருலோக்கி – திருவிடை மருதூர் அருகில்
திருத்துறையூர் – பண்ருட்டி
குடுமியான்மலை – புதுக்கோட்டை
சங்கரன் கோவில் –  சங்கர நாராயணர் கோவில்
விசயமங்கை – கோவிந்தபுத்தூர் – சுதை வடிவில் உள்ளது.
திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதைவடிவில் உள்ளது.
திருப்பழுவூர் –  கீழைப் பழுவூர் அரியலூர் –  சுதை வடிவில் உள்ளது.
திருவான்மியூர் – சுதை வடிவில் உள்ளது.
திருவேற்காடு – சுதை வடிவில் உள்ளது.

பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.