சிவ வடிவம் – 13. புஜங்கலளிதமூர்த்தி

புஜங்கம் என்றால் பாம்பு. லளிதம் என்றால் அழகு ஆபரணம் என்று பொருள். பாம்புகளுக்கு அபயமளித்து பாம்பை தனக்கு அழகுடன் ஆபரணமாக அணிந்ததினால் இப்பெயரைப் பெற்றார்.

காசிப முனிவரின் மனைவியரான கத்துருவிற்கும் வினந்தைக்கும் தங்களில் அடிகானவர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள் மற்றவளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் கணவரான காசிபரை நாடினார். கணவரோ கத்துருவே அழகி என்று கூறினார். இதன் விளைவாக வினத்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

வினதையின் இளைய மகன் கருடன் இந்த செய்தியை அறிந்து தன் தாய் இந்த அடிமைத் தளையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என தன் பெரியம்மாவிடம் கேட்டார். அதற்கு கத்துரு தேவலோகத்திலுள்ள அமிர்தம் கொண்டு வந்தால் உன் தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கின்றேன் எனக் கூறினாள். கருடன் தேவலோகத்தில் அமிர்த கலசத்தை காவல் புரிந்தவர்களுடன் போரிட்டு வென்று அமுத கலசத்தை கைப்பற்ற முயற்சித்தான். அப்போது திருமால் அவனை எதிர்த்தார். இருவருக்கும் நடந்த சண்டையில் திருமாலால் கருடனை வெற்றி கொள்ள முடியவில்லை. அப்போது கருடனின் வீரத்தைப் பாராட்டிய திருமால் உனக்கு வேண்டும் வரம் கேள் எனக் கேட்டார். கருடன் சிரிப்புடன் நீ யார் எனக்கு வரம் தருவதற்கு நான் உனக்கு வரம் தருகின்றேன் கேள் என ஆணவத்துடன் கூறினான். சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய திருமால் பாம்புகளுக்கு அமுதம் கொடுக்க கூடாது. மேலும் நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும் என்று இரு வரம் கேட்டார். கருடன் தன் அகந்தை அழிந்து திருமாலை வணங்கி அமிர்தத்தை பெற்று தன் அன்னையை அடிமை தளையிலிருந்து மீட்டார். தன்னிடம் இருந்த அமிர்தத்தை பாம்புகளுக்கு கொடுக்காததினால் பாம்புகளால் கருதப்பட்டான். அமுத கலசத்தை கொண்டுவந்து தன் தாயை விடுவித்தான். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றுப் பின்னர் திருமாலின் வாகனமானார்.

கருடன் அமிர்தம் கொடுக்காததினால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு அழியா புகழும் கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில் ஆபரணமாக அணிந்து கொண்டார். பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல் துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக் கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச் செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.

சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் திருப்பெரும்புலியூர். இங்கு புஜங்கலளிதமூர்த்தி உள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.