சிவ வடிவம் – 39. ஆபத்தோத்தாரணமூர்த்தி

இந்த உலகத்தில் எந்த ஓர் உயிர் என்றாலும் தனக்கு ஆபத்து வந்தால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களை கூறி சிவபெருமானை சரணடைந்து வணங்கினால் அவர்கள் விரும்பும் வண்ணம் அவர்களின் துன்பங்களை நீக்கி இன்பம் அளிப்பதற்காக இவ்வாறு என்று வார்த்தகளால் சொல்ல முடியாதபடி அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி மானுடர்கள் போல உருமாறி சட்டை அணிந்து இரண்டு திருக்கைகளோடும் வந்து அவர்களது துன்பங்களை போக்கி அருள் அளிக்கும் திருத்தோற்றமே ஆபத்தோத்தாரணமூர்த்தி ஆகும். ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி என்று பொருளாகும்.

கர்ம வினைகளினால் ஆட்பட்டவர்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் போது அடியவர்களுக்கு ஏற்றவாறு பல்வேறுபட்ட திருவுருவங்களை எடுத்து வந்து துன்பங்களை களைவார். அவரையின்றி வேறொருவர் நமக்குத் துணை கிடையாது. அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் சப்தரிஷிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் தேவகணங்கள் பூதகணங்கள் முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் அசுரர் கிம்புருடர் கின்னரர் நாகர் என இறைவனை உணர்ந்த பலரும் அவரைச் சுற்றிலும் நின்றபடி இருப்பார்கள்.

அவரது அற்புதங்களும் அவதாரங்களும் மூர்த்தங்களும் இன்னக் இன்னக் காரணங்களுக்கென மனித அறிவினால் கூற இயலாது. துன்பம் அடைந்தோரையும் ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.