இமாச்சல் பிரதேஷ் மாநிலம் காங்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் ஆலயத்தில் உள்ள ஆன்ம நந்தியின் சிலையில் நந்தியம்பெருமானின் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக் கொண்டுள்ளார்.
மனிதன் மரணம் அடைந்த பின்னர் செய்யும் 11 நாள் கிரியை செய்த பலனானது சிவனருள் மூலம் ஆத்மாவை எம தர்மனிடமிருந்து மீட்டு ரிஷப உத்ஸ்ஜர்னம் மூலமாக பித்ரு தேவதையாக்கப்பட்டு மூதாதையார்கள் இருக்கும் பித்ரு லோகம் செல்கிறது. அப்போது ரிஷபத்தின் வாலை பிடித்து கொண்டு பல நரககங்கள் கடந்து ஆத்மா பித்ரு லோகம் சென்றடைகிறது. இது வேதத்தில் உள்ள அந்தியேஷ்டியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்காட்ட சிலையாக வடித்துள்ளார்கள்.
