சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூவத்தான் என்ற பெயர் மருவி சங்கிலிப் பூதத்தான் ஆகியது. இதுவே பிற்காலத்தில் குழந்தைகள் பயப்படும் பூதம் என்று பெயர் வந்தது. இவர்கள் யார் என்றால் இறைவனின் அருகிலேயே இருக்கும் சிவ கணங்கள் ஆவார்கள். சிவ கணங்கள் தவறு செய்யும் போது அல்லது சாபத்தினால் பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகி விடுகின்றன. இவர்களது வேலை தீயவர் கயவர் நயவஞ்சகர் ஏமாற்றுபவர் பித்தலாட்டம் செய்பவர் கொள்ளையர் திருடர் கொலைகாரர் காமக்கொடூரர் எத்தர் என தர்மத்தை கடைபிடிக்காத அடுத்தவர்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்களை விழுங்கி இந்த பூதங்கள் தங்களின் பசியாற்றிக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இருக்கும் சங்கிலி பூதத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் மரத்தேரில் உள்ளவர் ஆவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.