இலகுலீசர்

சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தை தோற்றுவித்தவர். குஜராத் மாநிலம் காயாரோஹனம் எனும் இடத்தில் முதன் முதலில் தோற்றுவித்தவர். இவரின் சமயத் தத்துவங்கள் பாசுபத சைவம் என்று பெயர் பெற்றன. இவர் சிவபெருமானின் 28 ஆவது அவதாரமாகக் கருதப்படுபவர். இவரது சீடர்கள் கௌசிகர் கார்கி கௌதமன் ஆகியோரால் இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட பாசுபத சைவம் தமிழகத்தில் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வளரத் தொடங்கியது. இந்த சைவத்தை பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொள்வர். சாம்பலில் படுத்து உறங்கி சாம்பலில் நடனமாடி மாலைகளை அணிந்து கொள்வார்கள். லகுலீச பாசுபத சைவம் சார்ந்த கோயில்களில்தான் இவர்கள் தங்குவார்கள். சிற்பத்தில் லகுலிஷா நிர்வாண யோகியாக உள்ளார். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் உஜ்ஜைன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திரிவேணி அருங்காட்சியகத்தில் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.