ஆதி நடராஜர்

சிவதாண்டவத்தில் உன்னதமான ஆனந்த தாண்டவம் புடைப்பு சிற்பமாக நீளம் அகலம் 40 செமீ அளவில் சிறியதாக செதுக்கப்பட்டுள்ளது. நடனமாடும் சிவனின் கையில் உடுக்கை இல்லை. காலடியில் முயலகன் இல்லை. சிவனின் இரு காதுகளிலும் ஒரே விதமான குழைகள். தீச்சட்டி இடதுகையில் இல்லாமல் வலது கையில் ஏந்தப்பட்டிருக்கிறது. எப்போதும் அவர் கழுத்தைச் சுற்றியிருக்கும் நல்லபாம்பு கழுத்தில் இல்லாமல் தனியாகத் தரையில் படம் எடுத்தபடி இருக்கிறது. இந்தச் சிறிய சிற்பத்தில் வலது புறத்தில் ஒரு சிவகணம் முக்காலியில் அமர்ந்து ஒருபக்க மேளம் ஒன்றைத் தட்டிக் கொண்டிருக்கிறார். இடம் அவனிபஜன பல்லவேஸ்வரம் கோவில் (ஸ்தம்பேஸ்வரர் கோவில்) சீயமங்கலம் திருவண்ணாமலை.