பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-32
எந்த மனிதர்கள் இந்த கொள்கைகளில் குறை காண்பவர்களாக இந்தக் கருத்துக்களை ஏற்று நடப்பதில்லையோ அவர்கள் தங்களின் அறிவை இழந்து சீரழிந்து போவார்கள் என்பதை அறிந்து கொள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சுலோகங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் குறைகளைச் சொல்லி இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிர் மறையாக நடந்து கொள்பவர்கள் தங்களின் அறிவையும் இழந்து தங்கள் பிறவிக் கர்மங்களை தீர்த்துக் கொள்ள முடியாமல் மேலும் பல பிறவிகளை சேர்த்துக் கொண்டு சீரழிந்து போவார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.