சுலோகம் -161

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-42

புலன்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை பலமுள்ளவே நுண்ணியமானவை. இந்த புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. எது புத்தியைக் காட்டிலும் மேலானதோ அதுவே ஆத்மா.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய புலன்கள் பலத்துடன் கண்களால் பார்க்கக் கூடிய உடலை தன் விருப்பத்திற்கு இழுத்துச் சென்று வழி நடத்திச் செல்கிறது. ஆகவே உடலை விட புலன்களே மேலானவை என்று பலர் கூறுவார்கள். இந்த புலன்களை விட மனம் மேலானது. மனதை விட புத்தி மேலானது. இந்த மனதையும் புத்தியையும் சரியாக பயன்ப்படுத்தி ஆத்ம விசாரம் செய்தால் தமக்குள் இருக்கும் ஜீவாத்மாவான இறைவனை உணர்ந்து கொள்ளலாம். ஆகவே ஆத்மா அனைத்தையும் விட மேலானதாக இருக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.