சுலோகம் -158

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-39

அர்ஜூனா திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும் காமம் என்ற வடிவத்தில் உள்ளதும் ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்த காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நெருப்பில் எவ்வளவு நெய்யையும் விறகையும் போட்டாலும் நெருப்பானது போதும் என்று சொல்லாமல் மேலும் அதிகமாக எரிந்து கொண்டே இருக்கும். நிறையவும் நிறையாது. அது போலவே இறைவனை உணர்ந்த ஞானிகளுக்கு என்றுமே பகைவனாக இருக்கும் இந்த ஆசைகளை எவ்வளவு அனுபவித்தாலும் மேலும் இந்த ஆசைகளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த ஆசை என்ற பகைவனும் அதன் விளைவாக வரும் கோபம் என்ற பகைவனும் மனிதனுடைய ஞானத்தை மறைத்து வைக்கிறது.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.