சுலோகம் -143

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-24

நான் கர்மங்களை செய்யா விட்டால் இம்மனிதர்கள் அனைவரும் சீர் குலைந்து போவார்கள். நான் சீர் குலைவு செய்பவனாகவும் இவர்களை நானே அழித்தவனாகவும் ஆவேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 142 இல் உள்ளபடி நான் கர்மம் செய்யாமல் இருப்பதை பார்த்து மக்களும் தங்களுக்கு உண்டான கர்மங்களை செய்யாமல் இருந்து விட்டால் இந்த உலகம் சீராக நடைபெறாது. உலக இயக்கம் சீராக இல்லை என்றால் மக்களும் சீர் குலைந்து அழிந்து போவார்கள். இந்த அழிவிற்கு நானே காரணமானவனாக ஆகிவிடுவேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.