சுலோகம் -135

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-16

பார்த்தா எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு சுழழும் வட்டமாக வைக்கப்பட்ட படைப்பு சக்கரத்திற்கு அனுகூலமாக பின்பற்றி தன் கடமையை ஆற்றவில்லையோ புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கை உடையவன் வீணே வாழ்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 133 மற்றும் 134 இல் உள்ளபடி உலகில் படைப்புகள் வட்டமாக சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த சுழழும் வட்டத்தை பின்பற்றி எவனொருவன் கர்ம யோகத்தில் ஈடுபட்டு தனக்குண்டான கடமையை செய்யாமல் தனது புலன்களின் வழியாக வரும் போகங்களில் ஈடுபடுகிறானோ அவன் தன் பிறவியை வீணடித்துக் கொண்டு பாவ வாழ்க்கை வாழ்பவன் ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.