சுலோகம் -152

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-33

ஆத்ம ஞானம் உடையவன் கூட தனது இயல்புக்கு ஏற்றபடியே பழகுகிறான். அனைத்து உயிரினங்களும் தங்களின் இயற்கையான இயல்பின்படியே நடக்கின்றன. இவற்றை சாஸ்திரங்கள் என்ன செய்ய இயலும்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனது ஆத்மாவை அறிந்து கொண்டவன் ஆத்மாவின் இயல்புக்கு ஏற்றபடியே செயல்படுகிறான். ஆத்மாவை அறிந்து கொள்ளாத மற்ற உயிரினங்களும் தங்களின் உடலுக்கும் ஆசைக்கும் ஏற்றபடியே செயல்படுகின்றன. இந்த இரண்டு செயல்பாடுகளையும் சாஸ்திரங்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் ஆத்மாவை அறிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை. ஆத்மாவை அறியாதவர்கள் தன் கர்மாக்களின் வழியாகவும் ஆசையின் வழியாகவும் செல்வதினால் இவர்கள் சாஸ்திரங்களை கடைபிடிப்பதில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.