சுலோகம் -127

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-8

உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதை விட கர்மங்களை செய்வது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலை பராமரிப்பதும் இயலாத செயலாகி விடும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உனக்கு விதிக்கப்பட்ட விதியின் படி உனது தாய் தந்தை குழந்தைகளை பார்த்துக் கொள்வது முதல் உனக்கு உண்டான தொழிலை அல்லது உனக்கு விருப்பமான தொழிலை நீ செய்தே ஆக வேண்டும். ஏனெனில் நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சும்மா இருப்பதினால் உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை நீ செய்யாத காரணத்தினால் உனக்கு பாவம் வந்து சேரும். மேலும் உன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்கும் நீ உபயோகமில்லை என்று உன்னை தூற்றி தவறாக பேசுவார்கள். ஆகவே சும்மா இருப்பதை விட உனக்கு ஏற்ற தொழிலை நீ செய்து கொண்டு உனது குடும்பத்தை பார்த்துக் கொள்வது சிறந்தது. எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதினால் உடலும் உனக்கு ஒத்துழைக்காமல் கெட்டு விடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.