சுலோகம் -137

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-18

அந்த மனிதன் இந்த உலகில் கர்மங்களைச் செய்தாலும் எந்த பயனும் இல்லை. செய்யாவிட்டாலும் எந்த பயனுமில்லை. அவ்வாறே உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டியது என்ற தொடர்பு சிறிது கூட இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 136 இல் சொல்லப்பட்டபடி குறிப்பிட்டு சொல்லப்படும் மனிதர் இறைவனை தனக்குள் உணர்ந்த ஞானி ஆவார். அவர் எந்த விதமான பயனையும் தனக்காக பெறுவதற்கு கர்மம் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தாலும் அவருக்கு எந்த விதமான பாவமோ புண்ணியமோ எற்படுவதில்லை. மேலும் தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள அவர் இந்த உலகத்தில் எந்த பொருளையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.