சுலோகம் -133

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-14

உயிரினங்கள் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகிறது. உணவு மழையில் இருந்து உண்டாகிறது. மழை வேள்வியில் இருந்து உண்டாகிறது. வேள்வி கர்மங்களில் இருந்து உண்டாகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சாப்பிடும் உணவானது இரத்தமாக மாறி இரத்தம் ஆணுக்கு சுக்கிலமாகவும் பெண்ணுக்கு திரோணிதமாகவும் மாறும். இரு உயிரினமும் இச்சையினால் ஒன்று சேரும் போது புதிய உயிரினங்களின் உடல் உருவாகிறது. ஆகவே உயிரினங்களின் உடல் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகிறது. உணவானது மழையில் இருந்து உண்டாகிறது. மழையானது வேள்வியில் இருந்து உண்டாகிறது. வேள்வியானது உயிர்கள் இயற்றுகின்ற கர்மங்களில் இருந்து உண்டாகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.