பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-15
கர்மம் பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று உணர்ந்து கொள். பிரம்மம் அமிர்தத்தில் இருந்து தோன்றுகிறது. ஆகையால் எங்கும் நிறைந்த பிரம்மம் வேள்வியில் நிலை பெற்றது .
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
கர்மமானது உயிர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பிரம்மத்தில் இருந்து உருவாகிறது. பிரம்மமானது அமிர்தத்தில் இருந்து தோன்றுகிறது. (அமிர்தம் என்று சொல்லப்படுவது இங்கு வேள்வியாகும்) ஆகையால் பிரம்மமானது சுலோகம் 129 ல் சொல்லப்பட்டபடி மனிதர்கள் தினந்தோறும் செய்யும் கர்மங்களின் வேள்விகளில் நிலை பெற்று இருக்கிறது.