தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 271 திருஇந்திரநீலப்பருப்பதம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 271 வது தேவாரத்தலம் திருஇந்திரநீலப்பருப்பதம். மூலவர் நீலாசலநாதர். இங்கு இறைவன் சுயம்பு மலையாக அருளுகிறார். அம்பாள் நீலாம்பிகை. இறைவன் சன்னதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை. தீர்த்தம் இந்திரதீர்த்தம். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 18000 அடி உயரமுள்ளது. பத்ரிநாத் அடிவாரத்தில் இரவு தங்கி விடியற்காலை 4 மணி அளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீல பருப்பதத்தை தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திரநீல நிறத்தில் தரிசனம் தருகிறது. இந்திரன் வழிபட்டுள்ளார். அர்ஜூனன் தவம் புரிந்த இடம். பனி பிரதேசமாகையால் பத்ரிநாத் ஆலயம் 6 மாத காலம் மூடியிருக்கும். மேலும் மழை இல்லாத காலமாகிய மே முதல் செப்டம்பர் வரை தரிசனம் செய்யலாம். இந்திரன் பூசித்த காரணத்தால் இந்திரநீலப்பருப்பதம் என பெயர் பெற்றது. இந்திரன் வழிபட்டுள்ளான் என்ற செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தின் திருக்கடைக்காப்பிலுள்ள இந்திரன் தொழு நீல பர்ப்பதம் என்னும் பகுதியால் அறியலாம். நீலகண்ட சிகரம் எனவும் அழைக்கப்படுகிறது. காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே திருஞானசம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.