தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 15 திருக்கோலக்கா

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 15 வது தேவாரத்தலம் திருக்கோலக்கா. புராணபெயர் சப்தபுரி, திருத்தாளமுடையார் கோவில். மூலவர் சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஓசை கொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள். அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது. தலமரம் கொன்றை. தீர்த்தம் ஆனந்த தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம் உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம் நுழையும் போது நால்வர், அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன, நடராஜ சபை உள்ளது. திருஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோயிலின் நுழைவு வாயிலிலேயே திருஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும் ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது.

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று திருஞானசம்பந்தருக்காக இத்தலத்து இறைவன் திருஞானசம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் என்ற தாளங்களை கொடுத்து அருளினார். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் என பெயர் பெற்றார். இறைவன் கொடுத்த தாளங்களை தட்டிப்பார்த்தார் திருஞானசம்பந்தர். அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆகையால் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். திருஞானசம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தை இறைவன் அருள அதற்கு தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம் இதன்பொருட்டே இக்கோயில் திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது.

பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற மகிழ்ந்து கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள பொற்றாளம் கோயிலில் உள்ளது. அகத்தியர் கண்வர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

Sapthapureeswarar Temple,Thirukolakka,Nagapattinam district ...

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.