சுலோகம் -164

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-2

பார்த்தா இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள். அந்த யோகம் வெகு காலமாக மறைந்தாற் போல் ஆகிவிட்டது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?

ராஜ ரிஷிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்?

கர்ம யோகத்தின் படி பற்றில்லாமல் அரசர்களாக வாழ்ந்திருந்து பின்பு அனைத்தையும் துறந்து சாதகங்கள் செய்து வேதங்களின் உட்பொருளை அறிந்தவர்கள் ராஜ ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இஷ்வாகு மன்னனைத் தொடர்ந்து அவரது வாரிசுகளும் இந்த யோகத்தை ஒருவர் பின் ஒருவராக தங்களது வாரிசுகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். மன்னனைத் தொடர்ந்து மக்களும் அவ்வாறே வாழ்ந்து வந்தார்கள். இப்படி வழிவழியாக பல தலைமுறைகள் இந்த யோகத்தை கடைபிடித்து பற்றில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். காலம் செல்லச் செல்ல உலகத்தினருக்கு போகமும் பற்றும் வளர வளர கர்ம யோகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து இறுதியில் இந்த யோகத்தை சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் அழிந்தே விட்டது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.