சுலோகம் -171

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-9

அர்ஜூனா என்னுடைய பிறப்பும் செயலும் தெய்வீகமானவை. அப்பழுக்கற்றவை. உலகியலுக்கு அப்பாற்பட்டவை. இவ்விதம் எவன் தத்துவரீதியாக அறிந்து கொள்கிறானோ அவன் உடலைத் துறந்து மறுபடியும் பிறவி எடுப்பதில்லை. என்னை அடைந்து விடுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா பிறப்பு உள்ளது போன்று தோன்றும் எனது உருவத்திலும் நேர்மையாக இருப்பவர்களை காக்கும் எனது செயலிலும் இந்த உலகிற்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்து தனது பாவங்களை அதிகரித்து கொள்பவர்களை அழிக்கும் எனது செயலிலும் எவன் உள்ளது உள்ளபடி எனது தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்கிறானோ அவனுக்கு பிறப்பு என்பது இல்லை. அவன் என்னை வந்து அடைந்து விடுகிறான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.