சுலோகம் -170

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-8

சாதுக்களை கடைத் தெற்றுவதற்காகவும் பாவச் செயல்களை செய்கிறவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும் யான் யுகம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை அனுபவித்துக் கொண்டு இறைவனை சென்று அடைய வேண்டும் என்று நேர்வழியில் செல்பவர்களுக்கு துன்பம் ஏதும் நேராதபடி சரியான வழியை காண்பித்து அவர்கள் இறைவனடி சேர்வதற்காகவும் பாவச் செயல்களை செய்கின்றவர்கள் மேலும் பாவம் சேர்த்துக் கொள்ளாதபடி அவர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டி அனைவரும் தர்மத்தை கடைபிடிக்க செய்வதற்காகவே யுகம் தோறும் நான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.